Wednesday, September 28, 2011

கனவும் கற்பனையும்

கண் விழித்தேன்

கனவுகள் தொலைந்தது
கற்பனைகள் பிறந்தது..

கற்பனைக்கும் கனவுக்குமான
இடைவெளி சிறிது தான்..

கனவுகள் எனக்கு கை கொடுப்பதில்லை
கற்பனைகள் என்னை கை விடுவதில்லை..

என் கனவுகளே …
என் கற்பனையாய் வருவாயோ?
என் கற்பனையே …
என் கண்ணில் தோன்றுவாயோ ?